1-10-11-10-00-10-11-01-0

Tuesday, August 02, 2005

காமராஜ் - 101 [ # 4 ]

தமிழினத்திற்க்கு, மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட காமராஜ், கல்வித் துறையில் ஆற்றிய கடமைகள்:

(1) பள்ளிகள்: இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கினைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15,303. பின்பு 6000 பள்ளிகள் மூடப்பட்டன. அதுவே தனி மாநிலமாக அமைந்த பின்பு, காமராஜ் ஆட்சியின் இறுதியில் 1963-ல் மொத்தமாக 30,020 தொடக்கப்பள்ளிகளாக வள்ர்ச்சிப்பெற்றது. இடைநிலை கல்வியை பொறுத்த வரை 1954-ல் 1006 பள்ளிகளில் மொத்தம் 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காகியது.

(2) கல்வி மேம்பாடு: காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-ல் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி பிள்ளைகளிள் 45% மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963-ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80% குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். 1954-ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963-ல் பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக (47,44,091) உயர்ந்தது. கல்வித் துறையில் காமராஜ் செய்த புரட்சி, தமிழ் நாட்டு மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 'ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை" என்கிற நிலை காமராஜ் காலத்தில் உருவாயிற்று.

(3) மதிய உணவுத் திட்டம்: குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம் (இன்றைய சத்துணவு).

(4) பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்: 'பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்' என்பதை உறுவாக்கி, மக்ககளை கல்வி வளர்ச்சிக்கு உதவ முன் வரச் செய்தார். இந்த இயக்கத்தை தொடங்கிய 25 மாதங்களில், தமிழகமெங்கும் 133 மாநாடுகளை நடத்தி 4 கோடி ரூபாய் பணத்தையும், 2.47 கோடி பெறுமானமுள்ள பொருள்கள் நன்கொடையாகப் பெற்றார். மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தி 24,565 பள்ளிகள் தன்னிறைவுப் பெறச்செய்தார்.

(5) உயர்நிலைக் கல்வி: தேவையான அளவு நவீன வசதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மைல் தூரத்திற்கு ஒன்றாக அமைக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, ஏட்டுக் கல்வியோடு தொழி துறை சார்ந்த கல்வியை கற்பிக்க "தொழில்சார் கல்விமுறை" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வித் திட்டத்தால் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே - எஞ்னியரிங், அக்ரிகல்ச்சர், செக்ரடேரியல் கோர்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி முதலான தொழில் சார் கல்வி கற்க வழி வகுத்தார்.

(6) கட்டாய / இலகசக் கல்வி: தமிழகம் முழுவதும் 6- 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி, மற்றும் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. மேலும் கல்வித்துறை மூலமாகவே சீருடை வழங்க ஏற்பாடு செய்தார்.

(7) கல்லூரிகள்: இரண்டு பல்கலைகழகங்கலுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ல் கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ல் அதே இரண்டு பல்கலைகழகங்கலுடன் மொத்தம் 63 கலை, அறிவியல் கல்லூரிகளுடன் உயர்ந்து இருந்தது. 1954-ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள் காமரஜின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் 209-ஆக உயர்ந்தது.

(8) நூலகங்கள்: நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.



>>>>>> இனி சற்று விரிவாக ... <<<<<<<<


மனிதகுல முன்னேற்றத்திற்க்கு முக்கிய சொத்தாக இருக்கின்ற அறிவுக்கு தமிழகத்தில் அடித்தளமிட்டு, தமிழனின் வாழ்வுக்கு அச்சாரம் இட்டவர் காமராஜ். கல்வியில் சிறந்தது தமிழ் நாடு, அதை தமிழனுக்குச் சிறந்த, உரிய முறையில் அளித்தவர் காமராஜ்.

காமராஜ் பொறுப்பேற்ற ஆண்டில், கல்வி கல்வி அமைச்சர் சட்ட சபை கூற்றுப் படி "குறைந்த பட்ச தொடக்க கல்விக்கே 10- 12 கோடி ரூபாய் புதிய பள்ளிகளுக்கும், 6 கோடி ரூபாய் ஆசிரியர்களுக்கும் தேவை. மாகானத்தின் தற்போதைய நிதி வசதிவளை கொண்டு இவ்வளவு பெரிய நிதிச்சுமையை சமாளிக்க முடியுமா என சபை ஆராய வேண்டும்" என்பதே. ஆனால் அது மட்டும் பிரச்சனையாக இருக்கவில்லை, பள்ளிக்கு குழந்தைகள் வருகை, வந்தாலும் குறைந்தபட்ச ஆரம்ப கல்வி வரையிலாவது நீடிப்பது, பள்ளி செல்ல குழந்தைகள் செல்ல வேண்டிய நீண்ட தூரம், பள்ளி கூடங்களில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் என இப்படியும் பிரச்சனைகள். கல்வி மேம்பாடு என்பது ஒரு இரவில் நடைபெறக் கூடிய செயலல்ல.

1954-ல் தொடக்க கல்வின் நிலையறிய அரசு ஒரு குழுவை டாக்டர்.அழகப்ப செட்டியார் தலைமையில் நியமித்தது. அக்குழுவின் பரிந்துரைக்குபின் கல்வி திட்டங்கள் தீட்டலாமென்று எண்ணாமல், காமராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வி ஆண்டில் இயன்ற அளவு தொடக்க பள்ளிகள் திறந்திட அனைத்து முயற்சியுகளும் மேற்கொள்ளப்பட்டன. ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தை தற்கொலைத் திட்டமாகக் கருதி கல்லறை கட்டினார், ராஜாஜி இழுத்து மூடிய 6000 ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார். பள்ளி தொடங்க நடைமுறைகள் எளிமை படுத்தப்பட்டன(1954- 55). பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அதிகாரிகளே ஊர் ஊராக சென்ரனர். எங்கெல்லாம் 500 பேர் வாழும் ஊர் உண்டோ அங்கே சென்றனர். ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு பள்ளி வருமாறும் பார்த்துக் கொண்டணர். இந்த இரண்டு அடிப்படை கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. 500, அதற்க்கு மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள், சிறு நகரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, 12,967 புதிய பள்ளிகள் நிறுவப்பட்டன. 500 பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிற்றூரிலும் பள்ளிகூடம் திறக்க வேண்டும் என காமரஜிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவர்களின் வேண்டுகோள் நியாயமாக இருந்ததைக் கருதி, 1962- 63-ல் காமராஜ் அரசு 300 மக்கள் தொகை கொண்ட எல்லா சிற்றூரிலும் பள்ளிகள் துவங்கலாமென காமராஜ் அறிவித்து செயல்படுத்தினார். இதனால் தமிழகத்தின் அனைத்து சிற்றூரிலும் பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது, பள்ளிகளின் எண்ணிக்கை 30,000 தாண்டியது. பதவி ஏற்ற சுமார் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை காமராஜின் கல்வித்திட்டத்தால் இரு மடங்காகியது.

இந்திய அரசியலமைப்ப்புச் சட்டத்தில் கண்டுள்ளவாறு, தம் ஆளுகையின் கீழிருந்த தமிழ் நாடு மாநிலத்தில் பதினான்கு வயதுடைய பிள்ளைகளுக்குக் கட்டாய இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இந்திய அரசு, கிராமப்புறம் சார்ந்த பகுதிகளில் ஓராசிரியர் பள்ளியை உருவாக்கி தொடக்கக் கல்வியை மேம்படுத்தக் கொண்டுவந்த திட்டத்தைக் காமராஜ் அரசு எற்று உடனே செயல்படுத்தியது. தொடக்கப் பள்ளிகளே இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை பயன்படுத்தி, அதிகமான ஓராசிரியர் பள்ளிகளை காமராஜ் அரசு உறுவாக்கியது.

இதனால் 1954- 55-ல் 19 லட்சமாக இருந்த செலவு 1962-ல் இருமடங்காகி 38 லட்சம் ஆனது. இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியும் கல்வியின் சிறப்பை உணராத மக்கள், இளம் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்பாததைக் கண்டு காமராஜ் வருத்தமுற்றார். எனவே கிராமந்தோறும் பிரச்சாரக் கமிட்டிகளை அமைத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேரக்க வழி செய்தார்.

தொடக்க கல்வி பயின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகியதால், உயர்நிலைப் பள்ளிகளின் தேவை அவசியமானது. ஆகவே, காமராஜ் அரசு மாநிலம் முழுவதும் பரவலாக உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக கிராம பகுதிகளில் பல உயர்நிலைப் பள்ளிகள் தோன்றியது.

உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, ஏட்டுக் கல்வியோடு தொழி துறை சார்ந்த கல்வியை கற்பிக்க "தொழில்சார் கல்விமுறை" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வித் திட்டத்தால் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே - எஞ்னியரிங், அக்ரிகல்ச்சர், செக்ரடேரியல் கோர்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி முதலான தொழில் சார் கல்வி கற்க வழி வகுத்தார். கல்வியை கற்பிக்கத் தரமான ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்த காமராஜ் அரசு, திறமை மிக்க ஆண்-பெண் ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகளை அதிகமாக திறக்க முன் வந்தது.

>>>>>> பகல் உணவுத் திட்டம்: <<<<<<<<

காமராஜ் சிந்தனையிலே தோன்றிய பகல் உணவுத் திட்டம் (இன்றைய சத்துணவு), அமைச்சரவையின் ஆய்விற்கு வந்தது. முதலைமச்சரோ, கல்வி அமைச்சரோ வாய் திறப்பதற்க்கு முன்பே, வருவாய் துறை செயலர் "அரிஜனப் பள்ளியில் போட்ட பகல் உணவால், கான்ட்ராக்டர்கலள் பிழைத்தர், ஆசிரியர்கள் பிழைத்தர், சிறுவர் சிறுமியர்க்குக் கிடைத்த பலன் அளவில் மிகக் குறைவே. ஒராயிரம் பள்ளிகளில் விரயமாவதைப் போல பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்ல வேண்டியது எனது கடமை. இத்திட்டத்தை கைவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்லி முடித்தார். ஒரு நொடியில் காமராஜ் மிகவும் சாதாரணமாக சிரித்தபடியே அதற்குப் பதில் கூறினார், அது எல்லாறுக்கும் இடப்பட்ட கட்டளைப் இருந்தது. "இயக்குனர் இதை குறித்துக் கொள்ளட்டும், விரிவான ஆணை பிறப்பிக்கையில், மறந்து விடாமல், இதையும் ஆணையில் சேருங்கள். 'பள்ளி பகல் உணவுத் திட்டத்தைக் காண்ட்ராக்ட் முறையில் நடத்தக் கூடாது.', வேறு எந்த முறையில் நடத்தலாம் என யோசித்து சொல்லுங்கள்" என்று கூறினார். முதல் அமைச்சர் இவ்வாறு ஆணை பிறப்பித்த பிறகும் செயலர் குறுக்கிட்டு "மாணவர்களுக்கு சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுவார்கள், அவர்கள் வீட்டுக்கும் அனுப்பிவிடுவார்கள். மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார். மீண்டும் முதல் அமைச்சர் எவ்விதத் தயக்கமும் இன்றி சிரித்த முகத்தோடு "திட்டத்தில் உங்கள் ஞாபகமாக ஒரு விதியை சேர்த்து விடுங்கள். 'பகல் உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களும், பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.' அந்த கூடுதல் சாப்பாட்டுச் செலவு, நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளப்படும்" என்று பதில் கூறினார். அப்புறம் யாரும் குறுக்கிடவில்லை, பகல் உணவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பகல் உணவுத் திட்டத்தை அரசு திட்டமாக நிறைவேற்றுவதற்க்கு முன்பே, பல ஊர்களில் பொதுமக்கள் காமரஜின் வேண்டுகோளை ஏற்று தங்கள் சொந்த பொறுப்பில் நிறைவேற்றிட முனைந்தனர். பகல் உணவுத் திட்டத்தை முதலில் பாரதியின் எட்டயபுரத்தில் தொடங்கினர். பகல் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காமராஜ் பேசினார், அதில் சில "...நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசினார்.

மதிய உணவு திட்டத்தை ஒரு வாழ்க்கை தத்துவமாக கருதி தம் சக அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் இணைந்து முனைப்பான இறைப் பணியாகச் செய்தார். தமிழ்நாட்டின் செல்வந்தர்களும், வள்ளன்மை குணம் படைத்தோரும் பொருளுதவி செய்தனர். காமராஜின் மதிய உணவு திட்டம் பள்ளிகளுக்கு புதிய வரவுகளை உருவாக்கியது.

குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம், மக்களிடையே அறிவை மட்டும் வளர்க்கவில்லை, பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த செய்தது. அதனால் அக்காலத்தில் நிலவி வந்த ஜாதிப்பாகுபாடுகள் மலிந்தன.


>>>>>> பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்: <<<<<<<<

பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்க்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தபட வேண்டும், அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பதை காமராஜ் உணர்ந்தார். ஆனால், அரசிடம் போதிய நிதி இல்லை என்ற நிலை. ஆனால் கல்விகு நிதி ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்த காமராஜ், சமுதாய பங்கேற்ப்பை ஊக்குவிக்கும் மாநாடுகளை தமிழ் நாடெங்கும் நடை பெற்றிட ஆணையிட்டார். பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியலகள்
தாயாரிக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் நிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின. தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்கு தெரிவிக்ககப்பட்டு, உதவும்மாறு கேட்டுக்கொள்ளப் பட்டனர். கிராம மக்கள் உற்சாகத்துடன் உதவினர். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான் மக்கள் இயக்கமாக ஆக்குவது என முடிவு செய்யப்பட்டது.

"பள்ளிகளை கட்டுவது, பகல் உணவு அளிப்பது, ஆசிரியர்களை நியமிப்பது என்பவை எல்லாம் அரசாங்கத்தின் வேலை" என்பது போல் இருந்த மக்களிடையே, காமராஜ் ஒரு புரட்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். ஒவ்வொரு மனிதனும் "கல்வி என் பொறுப்பு ! கல்வி வளர்ச்சிக்கு நான் பாடுபட வேண்டும் !" என எண்ணி செயல்படுவதற்க்கு அந்த இயக்கம் காரணமாயிற்று. 'பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்' என்பதை உறுவாக்கி, மக்ககளை கல்வி வளர்ச்சிக்கு உதவ முன் வரச் செய்தார்.

இத்திட்டம் 1958-ல் செங்கற்பட்டு மாவட்டம் கடம்பத்தூரில் துவங்கியது. இம்முதல் முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டதால், தமிழ் நாட்டில் மேலும் 159 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தை தொடங்கிய 25 மாதங்களில், தமிழகமெங்கும் 133 மாநாடுகளை நடத்தி 4 கோடி ரூபாய் பணத்தையும், 2.47 கோடி பெறுமானமுள்ள பொருள்கள் நன்கொடையாகப் பெற்றார்.

07/1958-ல் திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கோண்டார். இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாட்டின் மூலம் பெறப்பட்ட நிதிகளின் மொத்த மதிப்பு 1,36,000 ரூபாய். முதல் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்ட இத்தகைய ஒரு மாநாடு 11/1958-ல் செங்கற்பட்டு நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கல்வி அமைச்சர் சி.கே.பந்த் கலந்து கொண்டர். 826 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரூபாய் 23 லட்சத்திற்க்கு திட்டம் வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அம்மாநாட்டில் திரு.சி.கே.பந்த் உரையாற்றும் போது, "பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டு திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது." என்று கூறினார். கூறியது மட்டுமின்றி, டெல்லி சென்றவுடன், பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளை பற்றி வியந்து கூறியுள்ளார். அதன் பின்பு 01/1959-ல் காரைகுடியில் உள்ள ஆ.தெக்கூரில் நடந்த பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரந்தமர் நேரு கலந்து கொண்டார்.அடுத்த நாள் திருநெல்வேலில் உள்ள அடைக்கல்ப்புர மாநாட்டிலும் நேரு கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் நேரு கடிதம் எழுதினார். 1963-ம் ஆண்டு வரை நடைபெற்ற மாநாடுகள் மூலம் கோடிக்கனக்கான ரூபாய் பெறுமானமுல்ல நன்கொடைகள் இந்த இயக்கத்தின் மூலம் குவிந்தன, பள்ளி மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது சாத்தியமாயிற்று. கல்வியில் தமிழகம் வழிகாட்டடியது. இந்த புதுமை திட்டத்தை அறிமுகப்படுத்தியவரை உலகமே பாரட்டியது.

மேலும் இதே முறையில் எழைக் குழந்தைகளுக்கு இலவசப் புத்தகம், எழுதும் பலகை ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்தார். மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படும் வகையில் பொருள்களையும் பணத்தையும் கொடுத்த உள்ளூர் மக்கள், பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலத்தையும், கட்டுமானப் பணிக்கு உரிய பொருள்களும், பள்ளிக்குத் தேவையான பொருள்களும் கொடுத்து உதவினர்.

இத்திட்டத்தை தொடர்ச்சியாக செயல் படுத்தப்பட்டதால் மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள், 24,565 பள்ளிகள் தன்னிறைவு பெற்றன. தொடக்க கல்வி அளவில் சுமார் 763 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கி பள்ளி மேம்பாட்டுக்கு உதவினார்கள்.


>>>>>> இலவச கல்வி: <<<<<<<<

முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லா இலவச கல்வி சலுகையும், பின்பு மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கும், அதேபோல் தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957- 58-ல் காமராஜ் அரசு ஆணையிடப்பட்டது. இதனால் மேலும் பலர் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகள் பெற்றனர். பின்பு ஆண்டு வருமானப் ரூ.1200 க்கு உள் இருக்கக்க்கூடிய குடும்ப மாணவர்களுக்கு உயர் கல்வி வரை இலவசக் கல்வி அளித்து 1960-ல் காமராஜ் அரசு ஆனை பிறப்பித்தது. அதுவே 1962-ல் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது.


>>>>>> கட்டாயக் கல்வி: <<<<<<<<

1960-ல் மாநிலத்தின் 3-ல் 1-பகுதியில் 6- 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1961-ல் நிலத்தின் இன்னோறு 3-ல் ஒரு பகுதியில் கட்டய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1962-ல் மீதமிருந்த ஒரு பகுதியிலும் கட்டாய் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

>>>>>> <<<<<<<<

1960 முதல் கல்வித்துறை மூலகாகவே சீருடை வழங்க ஏற்பாடு செய்தார். பொது மக்கள் நல்லுதவியுடன் செயல்பட்ட சீருடைத்திட்டம் 5 ஆண்டுகளில் மும்மடங்காகியது. இதன் மூலம் பள்ளிப் பிள்ளைகளிடையே காணப்பட்ட ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை ஒழித்து சமதர்ம சமுதாயம் உருவாக வழி வகுத்தார்.


>>>>>> கல்வி மேம்பாடு: <<<<<<<<

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-ல் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி பிள்ளைகளிள் 45% மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963-ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80% குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கினைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15,303. அதுவே தனி மாநிலமாக அமைந்த பின்னர் 1963-ல் மொத்தமாக 30,020 தொடக்கப்பள்ளிகளாக வள்ர்ச்சிப்பெற்றது. 1954-ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963-ல் பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக (47,44,091) உயர்ந்தது. இடைநிலை கல்வியை பொறுத்த வரை 1954-ல் 1006 பள்ளிகளில் மொத்தம் 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காகியது. இரண்டு பல்கலைகழகங்கலுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ல் கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ல் அதே இரண்டு பல்கலைகழகங்கலுடன் மொத்தம் 63 கலை, அறிவியல் கல்லூரிகளுடன் உயர்ந்து இருந்தது. 1954-ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள் காமரஜின் ஒன்பது கால ஆண்டு ஆட்சியில் 209-ஆக உயர்ந்தது.

கல்வித் துறையில் காமராஜ் செய்த புரட்சி, தமிழ் நாட்டு மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 'ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை" என்கிற நிலை காமராஜ் காலத்தில் உருவாயிற்று. தேவையான அளவு உயர் நிலை நவீன வசதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மைல் தூரத்திற்கு ஒன்றாக அமைந்தன.


>>>>>> ஆசிரியர் நலன்: <<<<<<<<

மாணவர் நலன்களில் அக்கரை உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டுமெனில், கற்றுதரும் ஆசிரியர்களின் மன நிறைவு முக்கியப். அதற்காக அவர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. முக்கியமாக ஆசிரியர்களுக்கான் மூன்று நலன் திட்டம் - (i)நிரந்தர வைப்பு நிதி, (ii)ஓய்வு கால ஊதியம் மற்றும் (iii)ஆயுள் காப்பீடு. ஆசியாக் கண்டத்திலேயே, காமராஜ் ஆட்சியில் தான் ஆசிரியர் சமுதாயத்திற்க்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெறும் வயது 55-ல் இருந்து 58-ஆக உயர்த்தப்பட்டது.


>>>>>> பொது நூலக இயக்கம்: <<<<<<<<

ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜ் அரசு, தொடக்க கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்க்கு இடம், கட்டிடம், நூல்கல், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்க்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாகத் தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயல்பட்டன.


---------------------------------------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: அமைச்சியல்

குறள்:
பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

பொருள்:
செய்ய வேண்டிய செயல், செயலுக்கு ஏற்ற பொருள், கருவி,
காலம், எற்ற இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் இன்றி
ஆராய்ந்து செய்யவேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources.

2 Comments:

Blogger சேகு said...

வணக்கம் நண்பரே
பெருந்தலைவர் காமராஜ் அவ்ர்களைப்பற்றிய பதிவுகள்
அருமை, காங்கிரசுக்காரர்கள்
இப்போது மறந்து விட்ட எளிமையை, நேர்மையை ஞாபக்ப்படுத்திவிட்டீர்கள்.பாவம் இனிமேலவர்களால் திரும்ப முடியாத காங்கிரசின் இளமைப்பருவம் அது.

August 05, 2005

 
Blogger கிவியன் said...

என்னடா இடைவெளி சாஸ்த்தியா போச்சேன்னு பார்த்தேன் #4 வந்துட்டுது.

சமீபத்துல லிங்கன பத்தி டைம் பத்திக்கைல விரிவா எழுதியிருக்காங்க
(http://www.time.com/time/archive/preview/0,10987,1077281,00.html?internalid=AMP). கிட்டத்தட்ட நம்ம பெரும் தலைவர்ட்டயும் லிங்கன மாதிரி குணாதிசயங்கள் உள்ளது. நம்மூர்ல விகடனோ, குதமோ இந்த மாதிரி ஒரு இதழ தலைவர பத்தி கொண்டுவந்தாங்கன்ன எவ்வளவு நல்லா இருக்கும்? ஹும் நடக்குமா?

August 09, 2005

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.