1-10-11-10-00-10-11-01-0

Tuesday, June 28, 2005

காமராஜ்: 101 (dummies)

தலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. "என்னடா கனகவேல், என்னா விஷயம்?...என்னது காகிதம்" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், "தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...

C/O THIRU. K. KAMARAJ
ALL INDIA CONGRESS COMITTEE PRESIDENT
8,THIRUMALAI PILAI ST
MADRAS-17

என ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது..."ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே?""இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்."கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு பண்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அந்த வருடம் அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: (12) நடுவு நிலைமை [சமநிலை போற்றல்)
குறள்:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
பொருள்:
முதலில் சமமாக நின்று, பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்திக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால்
அமைந்து, ஒரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோர் அழகு.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும்

Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 22, 2005

..ட்ரிங்....ட்ரிங்...

...ட்ரிங்....ட்ரிங்....வணக்கம்,
எதோ, ஏனோ தானோன்னு "ஊடு கால்" பொட்டு சைக்கிள் ஓட்டி பழகுற மாதிரி, இப்பத்தான் இங்கு தமிழ்மணத்ல எழுதி/பதிப்பித்து பழக போறேன். சின்னப் பய நான், எங்காவது முட்டிடாவோ, விழுந்துட்டாவோ ஒரு கை கொடுங்க. தப்பா ஒட்னா, சொல்லுங்க...சரி பண்ணிக்கலா.

நல்ல வேல, கவுண்டமணி மாதிரி கால ஊண்டாம பதினொன்னு போடுன்னெல்லா தமிழ் மணத்துல்ல ரூல் இல்ல், நான் தப்புச்சேன். ...ட்ரிங்....ட்ரிங்....
நன்றி,
டண்டணக்கா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தமிழ் நாட்டுக் குப்பை சாதனை

(*) கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துவக்கப்பட உள்ளது. இதற்காக மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
(*) கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் தினமும் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
(*) இவைகள் கொடுங்கையூரில் கொட்டப்படுகின்றன. குப்பைகள் அகற்றுவதற்காக மாதாமாதம் ஆறு லட்சம் ரூபாய்வரை சி.எம்.டி.ஏ., செலவு செய்து வந்தது.
(*) வீணாகும் குப்பைகளை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது. குப்பைகளில் இருந்து மின்சாரம் மற்றும் உயிர் உரங்கள் தயாரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது
(*) கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலேயே இதற்காக மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ. ஐந்து கோடி செலவில் பணிகள் மின் உற்பத்தி நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
(*) 30 டன் மட்டுமே தற்போது மின்சாரப்பணிக்கு பயன்படுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு தான் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
(*) மார்க்கெட்டில் இருந்து பெறப்படும் 30 டன் குப்பைகள் மூலம் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 800 யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஆண்டுக்கு 17 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். அத்துடன் ஒரு நாளைக்கு 10 டன் உயிர் உரமும் கிடைக்கும்

[[[[ *** நன்றி - தினமலர் *** ]]]]
*** இப்பதிப்பு செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் பதியப்பட்டது.
- டண்டணக்கா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கல்பாக்க சாதனை

நாட்டில் இப்போதுள்ள அணு மின்சார நிலையங்களில் அநேகமாக அனைத்துமே சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தி வருகின்றன. எனினும் இந்தியாவில் யுரேனியம் நிறையக் கிடைப்பதாகச் சொல்ல முடியாது.

தோரியம் என்ற அணுசக்திப் பொருள் இந்தியாவில் நிறையக் கிடைக்கிறது. கேரளக் கடற்கரை, மற்றும் குமரி மாவட்டத்தின் கடற்கரையோர மணலில் கிடைக்கின்ற ஒரு பொருளில் தோரியம் அடங்கியுள்ளது. இந்தத் தோரியத்தைக் குறிப்பிட்ட வகை யுரேனியமாக மாற்றி அதைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் வழக்கமான அணுமின்சார நிலையம் ஒன்று அமைந்திருக்க ஈனுலை எனப்படும் பரீட்சார்த்த அணுசக்தி நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த ஈனுலையானது தோரியத்தை அணுமின் நிலையங்களுக்கான எரிபொருளாக மாற்றும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டதாகும். 1985-ம் ஆண்டிலிருந்து இந்த ஈனுலை வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

(*)எந்த அணு உலையிலும் ""எரிந்து தீர்ந்த'' அணுசக்திப் பொருளைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வெளியே எடுத்து விடுவர். அப்படி வெளியே எடுக்கப்பட்ட பொருளானது தூக்கி எறியப்பட வேண்டிய கழிவுப்பொருள் அல்ல. இப்போது இவற்றிலிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் தனித்தனியே பிரித்தெடுப்பதில் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். (*)

உலகில் வல்லரசு நாடுகளிலும் சரி, ஈனுலை என்பது மிக அபூர்வமே. அதிலும் ஈனுலையில் இந்தியா பயன்படுத்தும் வடிவிலான எரிபொருளை யாரும் பயன்படுத்திப் பார்த்தது கிடையாது. ஆகவே இக் கலவைப் பொருளிலிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பிரித்து எடுத்தது உலகச் சாதனையாகக் கருதப்படுகிறது.

கல்பாக்கம் அணுமின் நிலையமும் ஈனுலையும் இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவியவையாகும். இது விஷயத்தில் நாம் நிச்சயமாகப் பெருமைப்படலாம்.

[[[[ *** நன்றி: தினமனி ***]]]]
*** இப்பதிப்பு செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் பதியப்பட்டது.
- டண்டணக்கா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 18, 2005


d2 Posted by Hello

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


pic Posted by Hello

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.